பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியதில், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.


Coimbatore: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத நிலையில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாதேஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் குறிப்பிட்ட பெட்ரோல் பங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் அந்த பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மெத்தனால் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...