சேலம் ரயில்வே கோட்டத்தில் முறையற்ற பயணிகளிடம் ரூ.5.88 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்த 42,823 பேரிடமிருந்து ரூ.3.62 கோடியும், முறையற்ற பயணம் செய்த 36,619 பேரிடமிருந்து ரூ.2.25 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் முறையற்ற பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ.5 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 813 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 42 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல, ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 36 ஆயிரத்து 619 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 33 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ற 83 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 801 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...