கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்கும் காவல்துறையைக் கண்டித்து வழக்கறிஞர் உண்ணாவிரத போராட்டம்


கோவை, கருமத்தம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்கும் காவல்துறையினரைக் கண்டித்தும், இதுகுறித்து விசாரிக்கச் சென்ற வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய காளப்பட்டி காவல்  ஆய்வாளர்  சேகரைக் கண்டித்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள சி.சுப்ரமணியம் சிலையின் அருகே அமர்ந்து வழக்கறிஞர் பிரபாகர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் பிரபாகர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகள் உள்ளிட்டு பல சாலைகளில் அமைந்திருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டன. தற்போது அந்தக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்ஒரு பகுதியாக கோவை கருமத்தம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஒடுக்கும் விதமாக காளப்பட்டி காவல்துறையினர் மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவது, அவமானப்படுத்துவது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து விசாரிக்க நான் மற்றும் காளப்பட்டி மக்கள் சிலர் காவல்நிலையம் சென்ற நிலையில், அங்கிருந்த காவல் ஆய்வாளர் சேகர் என்னுடன் வந்த சிலரை விசாரணைக் கைதிகலாக அங்கேயே அடைத்து வைத்து விட்டார். மேலும், என்னை "எதற்காக காவல் நிலையம் வருகிறாய்" என ஒருமையிலும், தரக்குறைவாகவும் திட்டி வெளியேற்றினார்.

ஒரு பிரச்சனை வரும் காலங்களில் மக்கள் காவல்நிலையத்தினை நாடாமல் எங்கே செல்வது?. ஊள்ளூர் அரசியல் கட்சியினருடன் இணைந்து கொண்டே காவல் ஆய்வாளர்  இவ்வாறாக செயல்படுகிறார். 

அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும். போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கையாளக்கூடாது. இதனை வலியுறுத்தியே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுளேன்" என தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...