கோவையின் பல்வேறு பகுதிகளில் பைக் வீலிங் - அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பைக் வீலிங் செய்து அச்சுறுத்தும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் வலம் வரும் சில பைக்கர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக திடீரென வீலிங் செய்து, பைக்கில் சாகசங்கள் செய்து அட்டகாசத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டகாசங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் c_l_u_t_c_h__breaker என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பைக்குளில் இருந்து நம்பர் பிளேட்டை அகற்றி விடுகின்றனர். முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர்.

சாகசங்கள் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், பொது இடங்களில் சேட்டைகள் செய்து மக்களை அச்சுறுத்தும் நபர்களை கோவை மாநகர போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிறர் உயிரோடு விளையாடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஜூன்.20 கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...