கோவையின் பல்வேறு பகுதிகளில் பைக் வீலிங் - அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பைக் வீலிங் செய்து அச்சுறுத்தும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் வலம் வரும் சில பைக்கர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக திடீரென வீலிங் செய்து, பைக்கில் சாகசங்கள் செய்து அட்டகாசத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டகாசங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் c_l_u_t_c_h__breaker என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பைக்குளில் இருந்து நம்பர் பிளேட்டை அகற்றி விடுகின்றனர். முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர்.

சாகசங்கள் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், பொது இடங்களில் சேட்டைகள் செய்து மக்களை அச்சுறுத்தும் நபர்களை கோவை மாநகர போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிறர் உயிரோடு விளையாடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஜூன்.20 கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...