கொளத்துப்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை - கட்டுப்படுத்துமாறு தாராபுரம் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

கொளத்துப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றுள்ளது. ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் 14 ஆவது வார்டு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு ஒன்றிய தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு பகுதியில் குலுக்குப்பாளையம், திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை பகல் நேரங்களில் காடுகளில் மேய்த்து இரவு நேரங்களில் மூங்கில் பட்டியலில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள் இடைச்சாமி என்பவரது தோட்டத்தில் 21 ஆடுகளையும், முத்து என்பவரது நான்கு ஆடுகளையும், லிங்கசாமி என்பவரது ஐந்து ஆடுகளையும், பீட்டர் குமார் என்பவரது மூன்று ஆடுகளையும், பாலு என்பவரது நான்கு ஆடுகளையும், நாட்டு துறை என்பவரது 3 ஆடுகளையும் வெறிநாய்கள் கடித்து கொதறியது. இந்நிலையில் இன்று காளியாத்தாள் என்பவரது ஆடு மற்றும் குட்டி என ஆடுகளை கடித்து சேதப்படுத்தி கொன்றுவிட்டது.

எனவே கடந்த ஒரு மாதத்திற்குள் 45 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்று குவித்துள்ளது. எனவே எங்கள் பகுதியில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடு வளர்ப்பை முற்றிலுமாக தொடர்ந்து ஆடுகளை வளர்க்க இயலாத சூழலில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார தொழிலாக ஆடு வளர்ப்பு தொடர்ந்து செய்யும் விதமாக உடனடியாக ஆடுகளை கொல்லும் தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மனுவை கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி தெரு நாய்களை கட்டுப்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் மேலும் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...