திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது-கோவையில் டிடிவி. தினகரன் பிரச்சாரம்..!

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல்.8)  ராமநாதபுரம், 80 அடி சாலையில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி, இன்று கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினார். 

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார். 



கூட்டத்தில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்யும் தீய சக்தி,திமுக.வை வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. பல்வேறு கூட்டணி கட்சிகள் அமைப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான கட்சி என்று கூறும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை..? 

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியும் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயம். 

தங்கள் மீது வழக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.,விற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது.

திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைந்து விட்டார்கள். விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து துறையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது.

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...