திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது-கோவையில் டிடிவி. தினகரன் பிரச்சாரம்..!

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஏப்ரல்.8)  ராமநாதபுரம், 80 அடி சாலையில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன்படி, இன்று கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், அமமுக பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினார். 

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார். 



கூட்டத்தில் பேசிய அவர், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் தற்பொழுது ஆட்சி செய்யும் தீய சக்தி,திமுக.வை வீழ்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. பல்வேறு கூட்டணி கட்சிகள் அமைப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான கட்சி என்று கூறும் சேலத்து சிங்கம் எடப்பாடி பழனிச்சாமி ஏன் போட்டியிடவில்லை..? 

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியும் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பயம். 

தங்கள் மீது வழக்கு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க.,விற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார். திமுக, அதிமுக, இடையே கள்ளக் கூட்டணி உள்ளது.

திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சி அமைந்து விட்டார்கள். விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து துறையும் இந்த ஆட்சி ஏமாற்றி வருகிறது.

பிரதமர் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை. கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...