அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார், அண்ணா மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மனுவில் தெரிவித்த அவர்கள், தமிழக அரசின் பொதுத்துறை அரசாணை எண் 47 (07.01.1978) மற்றும் அதன் தொடர்ச்சியான 1990-ஆம் ஆண்டு அரசாணையின்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.

ஆனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை அந்தப் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் நேரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டு மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது “புரோட்டோகால் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2025 செப்டம்பர் மாதத்திலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் முறையாக வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழக வெற்றி கழகம் எந்த தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததோ, அவர்களது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க ஏற்கனவே அரசாணை உள்ளது” என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களை அரசாணைப்படி உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...