உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூரில் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் செல்வகுமார் என்பவர் கழுவு பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று வழக்கம் போல் நூற்பாலை இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எழுந்த காரணத்தால் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி எடுத்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் சம்பவத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அமைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியே ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே கழிவு பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...