உடுமலை அருகே ஆண்டியகவுண்டனூரில் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்

எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி பகுதியில் செல்வகுமார் என்பவர் கழுவு பஞ்சு தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இன்று வழக்கம் போல் நூற்பாலை இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது எந்திரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எழுந்த காரணத்தால் பணி புரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அலறி எடுத்து ஓட்டம் பிடித்தனர்.



பின்னர் சம்பவத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அமைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 20 லட்சம் மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ பஞ்சுகள் எரிந்து நாசமானது.



இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியே ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உடுமலை அருகே கழிவு பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...