தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 5, 10 மற்றும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக, அனைத்து பில்கள், வவுச்சர்கள், மற்றும் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்கள் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பின்வரும் நாட்களில் புகைப்பட அடையாளத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...