கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி- கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.



கோவை: நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி திமுகவினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கினர். கடந்த ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.



பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நூதன பிரச்சாரத்தில், விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, அயலக அணி தலைவர் ராஜ்குமார், விவசாயபொறியாளர் அணி தலைவர் கண்ணதாசன், வைரமணி, ஆண்டனி, ஞானவேல், பாலசந்தர், செந்தில்குமார், கிருபாகரன், சுப்பிரமணியன், ரங்கநாதன், அமீன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...