கோ பேக் மோடி, கெட் அவுட் மோடி- கோவையில் திமுகவினர் நூதன பிரச்சாரம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.



கோவை: நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி திமுகவினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் திமுகவினர் "கோ பேக் மோடி - கெட் அவுட் மோடி" என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன், நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

அப்போது, எதற்காக கெட் அவுட் மோடி என கூறுகிறோம் என விளக்கினர். கடந்த ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்பதையும், எதற்காக உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.



பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு தலைமையில் நடைபெற்ற நூதன பிரச்சாரத்தில், விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, அயலக அணி தலைவர் ராஜ்குமார், விவசாயபொறியாளர் அணி தலைவர் கண்ணதாசன், வைரமணி, ஆண்டனி, ஞானவேல், பாலசந்தர், செந்தில்குமார், கிருபாகரன், சுப்பிரமணியன், ரங்கநாதன், அமீன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...