கவுண்டம்பாளையத்தில் குடிநீர் கேட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகள் கூறுவதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் அரசு பணியாளர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தினால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.



இதையடுத்து நேற்றிரவு நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்பு வாயிலில் அமர்ந்து திடீர் உள் இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் இந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செல்லும் நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டதன் காரணமாக வாகனங்கள் எதுவும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரச படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தண்ணீர் வேண்டும், தண்ணீர் வேண்டும் என கைகளை தட்டி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது கடந்த பிப்ரவரி மாதம் முதலே தண்ணீர் பிரச்சனை இருந்து வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும், தண்ணீர் கேட்டால் நீங்கள் கழிவறையை பயன்படுத்தாதீர்கள், வாசிங்மெசின் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். மேலும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதால் தங்களால் வெளியில் இருந்து தண்ணீர் கூட வாங்கி ஊத்த முடிவதில்லை என்று கூறினர்.

இதனையடுத்து ஹவுசிங் போர்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணி நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் மக்கள் கலைந்துசென்றனர். பிரச்சனை தீர்க்கப்பட்டவிட்டால் போராட்டம் தொடரும் என மக்கள் கூறியுள்ளனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...