அவிநாசி சாலை மேம்பால பணிகள் முடிய டிசம்பர் அல்லது ஜனவரி ஆகலாம் என தகவல்

ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உப்பிலிபாளையம் சிக்னல் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பால கட்டுமான பணிகளை முடிக்க ஒப்பந்தப்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தான் அவகாசம் உள்ளது ஏன்றாலும் இன்னும் பல பணிகள் பாக்கி உள்ளன.

மொத்தம் அமைக்கவேண்டிய 304 டெக் ஸ்லாப்களில் இதுவரை 212 டெக் ஸ்லாப்கள் மேலே பொறுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 92 தான் உள்ளது. 305 தூண்களில் 298 அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 7 தூண்கள் மட்டுமே உள்ளன. 10.1 கிலோமீட்டருக்கு மேம்பாலத்தில் சாலை பகுதி அமைக்கப்படவேண்டும்.

இதில் 6.1 கிலோமீட்டர் சாலைக்கான மேற்பரப்பு அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு உயர்மட்ட மேம்பாலத்திற்கான தூண் அமைப்பது சிக்கல் என்பதால் இந்த பகுதிக்கு நடுவே முன்னும் பின்னும் நெருக்கமாக உள்ள இரண்டு தூண்கள் இடையே 51 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் அதற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியதை அடுத்து, அங்கு முதலில் அதற்கான சோதனை பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அங்கு அமையவுள்ள இணைப்பு பாலத்தின் வடிவமைப்புக்கு ரயில்வே அனுமதி வழங்கியதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளது. எனவே இதுபோன்ற பணிகள் மீதம் இருப்பதால் இவற்றை முடித்திட குறைந்தது 4 மாதங்கள் ஆகும். இதன்காரணமாக மேம்பால பணிகள் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025ல் தான் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...