கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை என்றும், இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்று பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.



எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்‌ கூறியதாவது, முதல் மண்டலம் இரண்டாம் சுற்றில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெற வேண்டும். ஆனால் கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை. இதற்கான முறையான பதிலும் அதிகாரிகள் அளிக்கவில்லை. எனவே நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மேலும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் காங்கேயம் காவல் நிலையம் சென்று இந்த அபரிமிதமான தண்ணீர் திருட்டை தடுக்கவும், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஏபி விவசாயிகள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.‌ மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...