கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை என்றும், இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்று பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.



எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்‌ கூறியதாவது, முதல் மண்டலம் இரண்டாம் சுற்றில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெற வேண்டும். ஆனால் கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை. இதற்கான முறையான பதிலும் அதிகாரிகள் அளிக்கவில்லை. எனவே நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மேலும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் காங்கேயம் காவல் நிலையம் சென்று இந்த அபரிமிதமான தண்ணீர் திருட்டை தடுக்கவும், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஏபி விவசாயிகள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.‌ மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...