கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் மாட்டு வண்டியில் சென்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.


கோவை: கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டுவண்டியில் பயணம் செய்தவாறே, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.



இதனையடுத்து அப்பகுதி வடமாநிலத்தவர்கள் அமைச்சருக்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், இன்று (மார்ச்.30) தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாட்டு வண்டியில் சென்று, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, திமுக மாணவர் அணி மாநில தலைவர் ராஜீவ்காந்தி, தளபதி தியாகு உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...