தொடர் உயிரிழப்புகள் எதிரொலி: கோவை வெள்ளிங்கிரி மலையை யாரெல்லாம் ஏறக்கூடாது - வனத்துறை அறிவுரை.

இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்  மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக,மழையேற்றத்தின் போது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் எவை? யாரெல்லாம் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றுஇருட்டுப்பள்ளம் போலாம்பட்டி வனச்சரக அலுவலகம் இன்று 

செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

கோவை வனக்கோட்டம், பூண்டியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



அதன்படி, இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே, வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



"மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு, உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களை மலை அடிவாரத்திற்கு கொண்டு வருவது வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. 

எனவே, அனைவரின் நலன் கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்" என்று வனத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...