தொடர் உயிரிழப்புகள் எதிரொலி: கோவை வெள்ளிங்கிரி மலையை யாரெல்லாம் ஏறக்கூடாது - வனத்துறை அறிவுரை.

இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்  மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக,மழையேற்றத்தின் போது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் எவை? யாரெல்லாம் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றுஇருட்டுப்பள்ளம் போலாம்பட்டி வனச்சரக அலுவலகம் இன்று 

செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

கோவை வனக்கோட்டம், பூண்டியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



அதன்படி, இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே, வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



"மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு, உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களை மலை அடிவாரத்திற்கு கொண்டு வருவது வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. 

எனவே, அனைவரின் நலன் கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்" என்று வனத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...