கோவை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் மார்ச் 31-ல் தொடக்கம்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவையும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகின்றன. முன்பு கோவையில் இருந்து முதல் விமானம் காலை 6 மணியளவிலும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணியளவிலும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து முதல் விமானம் சென்னைக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து இரவு 6.50 மணிக்கு கோவைக்கு கடைசி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்ப முடியாமல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31-ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவை -சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவை கிடைக்கும். அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கு வழங்கப்படும். இந்த விமான சேவை பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

தொழில்துறையினர் கூறும் போது, கோவை- சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய சேவைகளால் சென்னைக்கு ஒரு நாள் பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அன்றைய தினமே கோவை திரும்ப பெரிதும் உதவும். அதே போல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மாலை இரவு 8 மணியளவில் வந்து அங்கிருந்து கோவைக்கு வர விரும்பும் பயணிகளுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனளிக்கும் என்றனர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...