கோவை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் மார்ச் 31-ல் தொடக்கம்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவையும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகின்றன. முன்பு கோவையில் இருந்து முதல் விமானம் காலை 6 மணியளவிலும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணியளவிலும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து முதல் விமானம் சென்னைக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து இரவு 6.50 மணிக்கு கோவைக்கு கடைசி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்ப முடியாமல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31-ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவை -சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவை கிடைக்கும். அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கு வழங்கப்படும். இந்த விமான சேவை பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

தொழில்துறையினர் கூறும் போது, கோவை- சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய சேவைகளால் சென்னைக்கு ஒரு நாள் பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அன்றைய தினமே கோவை திரும்ப பெரிதும் உதவும். அதே போல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மாலை இரவு 8 மணியளவில் வந்து அங்கிருந்து கோவைக்கு வர விரும்பும் பயணிகளுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனளிக்கும் என்றனர்.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...