கோவை கலெக்டரிடம் குறைகளை தெரிவிக்க வருபவர்களுக்கு மனு எழுத இனிமேல் இலவசம்

மனுக்கள் எழுத தெரியாத மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இலவசமாக எழுதி தருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பர்.



இவ்வாறு மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான மக்கள் எவ்வாறு மனு எழுதுவது என தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் வருகை தந்து இலவசமாக எழுதி தருகின்றனர்.

இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனுக்களை எழுதி தருவதால் பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் இருப்பவர்கள் மனுக்கள் எழுதுவதற்கு அதிகமான பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்து வந்தன.



இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இன்று (மார்ச்.11) முதல் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் தன்னார்வலர்கள் (நேரு யுவ கேந்திரா - கோயம்புத்தூர்) மற்றும் கல்லூரி மாணவர்களை அமர்த்தி இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.



இதனால் பொதுமக்கள் பலரும் இலவசமாக மனுக்களை எழுதி செல்கின்றனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...