வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தின விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர்.



இவ்விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மகளிர்கள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினர்.



தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வால்பாறையில் நீண்ட நாளாக செயல்பட்டு வந்த மக்கும் குப்பை, மக்கா குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.



பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு பிரித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, அதை உரமாக தயாரித்து தமிழக வேளாண் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உரங்களில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து பின்பு 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ, 50 கிலோவாக பேக் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வீதாம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



அதை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் விற்பனை செய்து துவக்கி வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொறியாளர் கோகிலா செந்தில்குமார், வீரபாகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...