வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம்

உலக மகளிர் தின விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகளிர் தின விழாவை கொண்டாடினர்.



இவ்விழாவில் கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஆடல் பாடல் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு மகளிர்கள் அனைவரும் சந்தோஷமாக கொண்டாடினர்.



தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து வால்பாறையில் நீண்ட நாளாக செயல்பட்டு வந்த மக்கும் குப்பை, மக்கா குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.



பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று அங்கு பிரித்து எடுக்கப்பட்டு இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு, அதை உரமாக தயாரித்து தமிழக வேளாண் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உரங்களில் உள்ள நன்மைகளை ஆய்வு செய்து பின்பு 5 கிலோ, 10 கிலோ, 20 கிலோ, 50 கிலோவாக பேக் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வீதாம் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.



அதை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் விற்பனை செய்து துவக்கி வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி வந்த நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நகர மன்ற தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொறியாளர் கோகிலா செந்தில்குமார், வீரபாகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...