பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் NIA கல்வி நிறுவனங்கள் மற்றும் யுவசக்தி மகளிர் நல சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சாந்தாமணி கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தின விழா சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து NIA கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று NIA கல்வி நிறுவனங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...