கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டாக்டர் கோகுல் கிருபா சங்கர் விருப்பமனு சமர்ப்பிப்பு

கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தி.மு.க கட்சியின் பிரமுக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களின் ஆதரவுடன் சமர்ப்பித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் சார்பில் திமுகவின் உயர் நிலை நிர்வாகியும், மாநில மருத்துவ அணி இணை செயலாளருமான டாக்டர் கோகுல் கிருபா சங்கர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி தொண்டாமுத்தூர், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வடவள்ளி தங்கம், குப்புசாமி மற்றும்ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தி.மு.கவின் மிக முக்கிய உறுப்பினராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கி, பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெருமழை, கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் உதவி பணிகளில் முன்னின்று பணியாற்றியுள்ளார். 2006 முதல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி, 2013ல் மாநில மருத்துவ அணி துணை செயலாளராகவும், 2023ல் இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அவினாசி தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2021லும் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க குடும்பத்தில் பிறந்து, கட்சியின் மூல மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் டாக்டர் சங்கரின் அரசியல் பயணம் சமூகத்திற்கும், கட்சிக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...