கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட டாக்டர் கோகுல் கிருபா சங்கர் விருப்பமனு சமர்ப்பிப்பு

கோவை தொகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தி.மு.க கட்சியின் பிரமுக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களின் ஆதரவுடன் சமர்ப்பித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் சார்பில் திமுகவின் உயர் நிலை நிர்வாகியும், மாநில மருத்துவ அணி இணை செயலாளருமான டாக்டர் கோகுல் கிருபா சங்கர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை சமர்ப்பித்துள்ளார். இந்த நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.ரவி தொண்டாமுத்தூர், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வடவள்ளி தங்கம், குப்புசாமி மற்றும்ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

டாக்டர் கோகுல் கிருபா சங்கர் தி.மு.கவின் மிக முக்கிய உறுப்பினராக தனது அரசியல் வாழ்வினை தொடங்கி, பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பெருமழை, கொரோனா பாதிப்பு காலங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் உதவி பணிகளில் முன்னின்று பணியாற்றியுள்ளார். 2006 முதல் அனைத்து மாநில மற்றும் மத்திய தேர்தல்களிலும் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி, 2013ல் மாநில மருத்துவ அணி துணை செயலாளராகவும், 2023ல் இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். அவினாசி தொகுதியில் 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 2021லும் பொறுப்பு வகித்துள்ளார். தி.மு.க குடும்பத்தில் பிறந்து, கட்சியின் மூல மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் டாக்டர் சங்கரின் அரசியல் பயணம் சமூகத்திற்கும், கட்சிக்கும் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...