ஓய்வு பெறும் கடைசி நாளில் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் ஹரிஹரன் வயது 60. இவர் காங்கேயத்திற்கு பணிக்கு வருவதற்கு முன்னர் குண்டடம் யூனியனில் கடந்த 2022-2023ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது தாராபுரம் தாலுக்கா, குண்டடம் யூனியனின் அம்மா சிமெண்ட் விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள புகாரின் பேரில் கடந்த 2023 மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் ஹரிஹரன் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 ஆயிரத்து 217 சிமெண்ட் மூட்டைகள் விநியோகத்தில் முறைகேடு செய்யப்பட்டதை அடுத்து அலுவலர் ஹரிஹரன் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது தற்போது வரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நடத்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் ஓய்வு பெற இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று காங்கேயத்திலும் சிவன்மலை, வீரணம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டாக எழுந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் மட்டும் சிக்குகின்றனர் என்று பார்த்தால் காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் ஒய்வு பெரும் நாளில் சஸ்பெண்ட் ஆனது வேடிக்கையாக இருக்கிறது.

அலுவலக மீட்டிங், கிராமசபை கூட்டங்களில் இதே பிடிஓ பேசும் போது அரசு ஊழியர்கள் என்ற மமதையில் இவருக்கு கீழே உள்ள அதிகாரிகளை இவர் வசைபாடிய வீடியோக்கள் கடந்த ஆண்டு சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...