மண்ணை கொட்டி வெயிட் ஏத்தறாங்க, குப்பை எடுக்காம சிட்டி மோசமா இருக்கு - கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் புகார்

சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் சொல்கிறார்கள் எனவும், ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமா இருக்கு எனவும், குப்பை வெய்ட் அதிகமாக்கிறதுக்காக ரோட்டோரம் கிடக்கிற மண், ஜல்லி, கல் என எல்லாத்தையும் பொறுக்கி போட்டு அதிக டன் குப்பை எடுத்ததா கணக்கு காட்டுகிறாங்க எனவும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளர் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சியில் காண்டிராக்டர்ஸ் சங்கத்தை சேர்ந்த 25 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலைமையில் 6 மாதம் முன்பு வெளி மாநிலத்தை சேர்ந்த சதர்ன் கம்பெனிக்கு மொத்தமா காண்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. 25 காண்ட்ராக்டர் செய்த வேலையை அந்த ஒரு கம்பெனி செய்றாங்க. இப்போ மொத்தமும் பிரைவேட் அப்படிங்கிற நிலைமை உருவாகியிருச்சு. அந்த சதர்ன் கம்பெனி சரியா குப்பை எடுக்கவில்லை என புகார் சொல்கிறார்கள். ஆனா குப்பை கிடங்குக்கு போற குப்பை வெயிட் மட்டும் அதிகமா இருக்கு. குப்பை வெய்ட் அதிகமாக்கிறதுக்காக ரோட்டோரம் கிடக்கிற மண், ஜல்லி, கல் என எல்லாத்தையும் பொறுக்கி போட்டு அதிக டன் குப்பை எடுத்ததா கணக்கு காட்டுகிறாங்க.

கடந்த காலங்களில் எடுத்ததை விட இப்போ 500 டன் அதிகமாக வர மாதிரி சொல்றாங்க. கடந்த காலங்களில் 25 காண்டிராக்டர்கள் குப்பை எடுக்கும் வேலை செய்த போது பெரும்பாலான இடங்களில் குப்பை இல்லாமல் சுத்தமா இருந்துச்சு. ஆனா இப்போ குப்பைகள் பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அந்த கம்பெனி ஏன் வேலை செய்யவில்லை என மாநகராட்சியும் கேட்கவில்லை.

அந்த கம்பெனியை விட்டா வேற வழி இல்ல அப்படிங்கற மாதிரி அப்படியே விட்டுட்டாங்க. வெயில் காலமாக இருக்கிறதால பரவாயில்ல.

இதே மழை காலமாக இருந்தால் தேங்கி கிடக்கிற குப்பையால வேகமா நோய் பரவியிரும். மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிக்கு அனுபவம் வாய்ந்த காண்ட்ராக்டர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு தனியார் கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டு அவர்கள் சரியாக வேலை செய்யாவிட்டாலும் அப்படியே விடுவது சரியல்ல. குறைந்தபட்சம் 4 ஒப்பந்ததாரர்களுக்காவது பணியை பகிர்ந்து கொடுத்து இருந்தால் ஒருவர் சரியாக செய்யாவிட்டாலும் இன்னொருவர் மூலமாக பணியை செய்ய வைத்திருக்க முடியும். மாநகராட்சியில் இருக்கிற காண்ட்ராக்டர்களுக்கு குப்பை அகற்றும் பணி சம்பந்தமாக பயிற்சி கொடுத்திருக்கலாம்.

ஆனா பொதுவா மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குப்பை அகற்றும் பணியை சரியா வேலை செய்யல என தகவல் பரவியிருக்கிறது. இது மன வருத்தம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் பணி செய்த போது சிறப்பாக இருந்தது. இவ்வாறு கேசிபி சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...