கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 கோடி கடன் உதவி

ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு ரூ.13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு 924 கோடி இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர். இந்த நிலையிலே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கோயம்புத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கடன் உதவி தரப்பட்டன.



கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கிலே, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி காசோலைகளை வழங்கினர்.



ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு 13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில், 6835 மகளிர்கள் இதன் வாயிலாக சுயதொழில் செய்யவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த கடன் உதவி வழங்கினர். இது குறித்து பேசிய கடன் உதவி பெற்ற மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள், இந்தக் கடனுதவி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என தெரிவித்தனர்.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் வாயிலாக கடன் உதவி பெற்றவர்கள், அதனை வைத்து தையலகம், உணவகம், பூக்கடை, ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், கோழி வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தனர். பெண்கள் எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக கடன் உதவி கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும், இதனை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...