தென் குமாரபாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.



மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம முற்றுகையிட்டு சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் இருந்தும் தற்போது மின்தடையும் ஏதும் இல்லாத போதிலும் தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் ஒதுக்கப்பட்ட தண்ணீர் முறையாக வருவதில்லை எனவும், தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலானதால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீர் வழங்காமல் மெத்தனப் போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முற்றுகையிட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...