கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணா படத்திற்கு திமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் பல இடங்களில் அமைதி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே பேரறிஞர் அண்ணாவின் உருவ படத்திற்கு திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

கூடலூர் நகர செயலாளர் மற்றும் கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு தலைமை தாங்கி கோசங்கள் போட்டு மலர் தூவினார். துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 4வது வார்டு செயலாலர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அண்ணா புகழ் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் துரை, செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன் மாடசாமி, நிர்வாகிகள் வக்கீல் பிரபு, பால்சந்த், வார்டு செயலாளர்கள் கோபால், துரைசாமி, சாமிசெட்டிபாளையம் ரமேஷ், கேஸ்கம்பெனி சுரேஷ், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் சுந்தரராஜன், ஜெயசந்திரன், காளியண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ரேவதி, மணிமேகலை, ரம்யா, சித்ரா, வனிதாமணி, பேங்க் முருகேசன், ராகுல், சாலைவேம்பு குணசேகரன், நகர துணை செயலாளர்கள் செல்வி, கிரேஷி, முன்னாள் துனைத்தலைவர் கோகிலாமணி, மகளீர் அணியை சேர்ந்த சுகந்தி, ஸ்ரீனியம்மாள், புஷ்பா, சித்ரா உட்பட ஏராளமனோர் கலந்துக்கொண்டு மரியாதை செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...