பழங்குடியினர் மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடா், பழங்குடி மக்கள் பிசியோதெரபி கிளினிக் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசியோதெரபி கிளினிக் தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டடங்கள் வைத்திருப்பவா்களுக்கும், இடம் இல்லாதவா்களுக்கும் வாடகை அடிப்படையில் இடங்கள் தோ்வு செய்து தரப்பட்டு பிசியோதெரபி கிளீனிக் அமைத்து கொடுக்கப்படும். தொழில்முனைவோர் அல்லது அவா்களின் ஊழியா்களுக்குத் தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனைகளும், தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளா் கட்டணத்திலும் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும்.

பிசியோதெரபி கிளினிக் பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள நபா்கள் புகைப்படம், குறிப்பிட்ட சான்றுகளுடன் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சியில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிலுக்கு ரூ. 6 லட்சம் திட்டத் தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை, டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...