இனிமேல் முன்னாள் மாணவர்கள் என்று அழைக்க வேண்டாம் - அன்னூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேச்சு

வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல் என சுமார் ரூ.2 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை அன்னூரில் 73 ஆண்டுகள் பழமையான அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் முன்னணி மருத்துவமனையில் தலைவர்களாகவும், டெல்லியில் மத்திய அரசின் உயர் பதவிகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில் தற்போது உள்ள தலைமை ஆசிரியை சித்ரா முயற்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரை ஒன்றிணைத்து பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பல பணிகளைக் கடந்த ஆண்டு துவக்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் வகுப்பறைகள் சீரமைத்தல், அறிவியல் ஆய்வுக்கூடம், புதிய ஆய்வுக்கூட கட்டிடம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலக கட்டிடம் புதுப்பித்தல், 73 கண்காணிப்பு கேமரா அமைத்தல், 20 வகுப்புகளுக்கு மின் விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்தல், மாணவர்களின் இருக்கைகளை புதுப்பித்தல், 35 வகுப்பறைகளுக்கு மேஜைகள் அளித்தல், தையல் பயிற்சி அளித்தல், கூடைப்பந்து மைதானம் சீரமைத்தல், கழிப்பறை அமைத்தல், கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், இரவு காவலர் நியமித்தல் ஆகிய பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளனர்.



இந்த பணிகளை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விதமாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டி பொருட்களை பள்ளிக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாணவர்களிடையே பேசிய இறையன்பு ஐஏஎஸ், இனி முன்னாள் மாணவர்களை அவ்வாறு அழைக்க வேண்டாம், அவர்களை என்றும் மாணவர்கள் என்று அழையுங்கள் என்று கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...