உடுலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


திருப்பூர்: உடுமலை உட்கோட்ட காவல்துறை உடுமலை போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஸ்ரீ‌ ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை பஸ் நிலையத்தில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமை வகித்தார். எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் வரவேற்றார். இதில் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.



இதில் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாதுகாப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவிகள் இடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி போக்குவரத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக உடுமலை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார், நூலகர் கணேசன்(ப.நி) ஆகியோர் கலந்து கொண்டனர். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் , உறுப்பினர்கள் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...