கோவை மண்டலம் சார்பில் துடியலூரில் நடைபெற்ற 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம்

கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை துடியலூரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் கோவை மண்டலம் சார்பில் 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் தங்கசாமி என்கிற திருவேல் முருகன், மாநில செயலாளர்கள் சின்னதுரை, கூடல் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகர்கள் பாதுகாப்பு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் 5 சதவீதம் வரை வரி விதிக்கவும், உணவுப் பொருளுக்கு அறவே வரி விலக்கு அளித்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி பொருள்களுக்கு குறைந்த அளவில் வரிவிதிப்பும், இறக்குமதி பொருள்களுக்கு அதிக அளவில் வரிவிதிப்பும் விதிக்கப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கு முழு அளவில் ஊக்கம் கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி எண் எடுத்து வணிகம் செய்யக்கூடிய வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். சிறிய சுதேசி வணிகர்களுக்கு கார்ப்பரேஷன் லைசன்ஸ், பஞ்சாயத்து லைசன்ஸ், தொழில் வரி கட்டி வணிகம் செய்யக்கூடியவர்களுக்கு 25 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அய்யனார் ராஜ், பாஸ்கர், சேர்மகனி, ஆத்திச் செல்வன், மகாராஜன், வேதநாயகம், மணி உட்பட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர். இறுதியில் குமாரவேல் நன்றி கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...