கோவை மண்டலம் சார்பில் துடியலூரில் நடைபெற்ற 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம்

கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை துடியலூரில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் கோவை மண்டலம் சார்பில் 41-வது வணிகர் தின ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் தங்கசாமி என்கிற திருவேல் முருகன், மாநில செயலாளர்கள் சின்னதுரை, கூடல் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



வடக்கு மாவட்ட தலைவர் கிஷோர் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில தலைவர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிகர்கள் பாதுகாப்பு குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திட வேண்டும். கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடியாக இரயில் போக்குவரத்து துவக்கிட வேண்டும். ஜி.எஸ்.டி வரியில் இருக்கின்ற குளறுபடிகளை நீக்கி சுதேசி வணிகர்களை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்திட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் 5 சதவீதம் வரை வரி விதிக்கவும், உணவுப் பொருளுக்கு அறவே வரி விலக்கு அளித்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல கோயம்பேடு மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி பொருள்களுக்கு குறைந்த அளவில் வரிவிதிப்பும், இறக்குமதி பொருள்களுக்கு அதிக அளவில் வரிவிதிப்பும் விதிக்கப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கு முழு அளவில் ஊக்கம் கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி எண் எடுத்து வணிகம் செய்யக்கூடிய வணிகர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். சிறிய சுதேசி வணிகர்களுக்கு கார்ப்பரேஷன் லைசன்ஸ், பஞ்சாயத்து லைசன்ஸ், தொழில் வரி கட்டி வணிகம் செய்யக்கூடியவர்களுக்கு 25 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அய்யனார் ராஜ், பாஸ்கர், சேர்மகனி, ஆத்திச் செல்வன், மகாராஜன், வேதநாயகம், மணி உட்பட கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர். இறுதியில் குமாரவேல் நன்றி கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...