பணி நிரந்தரம் கேட்டு வரும் 31ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம்- பொள்ளாச்சியில் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகம் முழுவதும் 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

திமுக ஆட்சியில் மூன்று முறையும், அதிமுக ஆட்சியில் மூன்று முறையில் மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். தற்போது 13 ஆயிரத்து 500 பேர் வேலை இழந்து உள்ளார்கள். கடந்த தேர்தலில் மக்கள் நல பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.



சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி மக்கள் நலப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இறந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் நல பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் மற்றும் அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 31ஆம் முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

எங்களது போராட்டங்கள் நிறைவேற்றும் வரை பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...