உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்

பனமரத்துபாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.



இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டாவது நாள் போராட்டத்தில் 75-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சட்டமேதை அம்பேத்கர் அனைவருக்கும் சமம் என சட்டம் இயற்றினார். சட்டப்படி அனைவரும் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



ஆனால் உப்பாறு பாசன விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்கக்கூடிய இரண்டு டிஎம்சி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்காமல் ஏமாற்றுவதாகவும். அதனால் சட்டமேதை அம்பேத்கரின் சட்டத்தையே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவமானப்படுத்துவதாகவும் கருதி சட்டமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்தை கையில் ஏந்தி அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.

இதனால் உப்பாறு அணை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உப்பாறு அணை விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தெரிவிக்கையில், தாராபுரம் தாலுகாவில் உள்ள பனமரத்து பாளையம், தொப்பம்பட்டி, வரப்பாளையம், கெத்தல்ரேவ், நஞ்சியம்பாளையம், தும்பலப்பட்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உப்பாறு அணைப் பகுதி விவசாயிகளுக்கு, கால் நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை.

நேரடியாக 6300 ஏக்கரும் மறைமுகமாக 15,000 ஏக்கரும் விவசாய நிலம் விவசாய பணிகள் எதுவும் நடைபெறாமல் விவசாயிகள் வருமானமே இன்றி வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் அனைவரும் ஊரைக் காலி செய்து விட வேண்டும். இப்பகுதி விவசாயிகளுக்கு உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உப்பாறு அணையின் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...