பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த சோலையார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் லோகாம்பாள், சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதாக கூறி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி மாவட்ட கல்வித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு தலைமை ஆசிரியை லோகாம்பாள் தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை தன்னுடைய சொந்த வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், அப்படி அடிபணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

எனவே சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...