தேசிய வாக்காளர் தினம் - கோவையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: தேசிய வாக்காளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது அவசியம், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது குறித்து எல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி தலைமையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைக்கு தொடக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.



அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பிரச்சார பேரணியானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், அண்ணா சிலை வ உ சி மைதானம் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.



இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திய படி செல்லும் வழியில் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...