தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உடுமலையில் நாடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாகனங்கள் தொடக்கம்

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது முக்கியத்துவம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி என இரண்டு வாகனங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார்.

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும். வாக்களிப்பது குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாகனத்தில் இருக்கும் வருவாய் துறையினர் விளக்கம் அளிப்பார்கள் என உடுமலை வருகை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம் துவக்க நிகழ்வில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...