தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உடுமலையில் நாடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாகனங்கள் தொடக்கம்

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்களிப்பது முக்கியத்துவம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி என இரண்டு வாகனங்களை உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார்.

நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் மற்றும் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படும். வாக்களிப்பது குறித்து மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வாகனத்தில் இருக்கும் வருவாய் துறையினர் விளக்கம் அளிப்பார்கள் என உடுமலை வருகை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்தார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம் துவக்க நிகழ்வில் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...