கோவை மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில், சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு காட்சியளித்தனர்.


கோவை: கோவையில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஜனவரி 24) திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.



அதன்படி சுப்பிரமணிய சுவாமி கிளிபச்சை பட்டு உடுத்தியும், வள்ளி சிகப்பு பட்டு உடுத்தியும், தெய்வானை மஞ்சள் பட்டு உடுத்தியும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். பின்னர் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு தாரை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு மங்களநாணை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். திருமண கோணத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...