திமுகவினரே அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலை அளிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவுக்கு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 28ஆம் தேதி வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடத்துவது குறித்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றதாகவும், அதனை இருட்டடிப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது எனவும் பேட்டி அளித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் முதல் எண் மக்கள் யாத்திரையை தொடங்கியுள்ளதாகவும் திருப்பூரில் 28ஆம் தேதி நடைபெறும் யாத்திரயில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார் எனவும் தெரிவித்தார்.

யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுகவினர் பொய்யின் பிறப்பிடமாக இருப்பதாகவும், இதற்காகத்தான் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நல்லதொரு தீர்ப்பை நேற்று வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பொதுமக்கள் மட்டுமல்லாது, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட தங்கள் கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வழங்கி வருவதாகவும், திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளிக்கொண்டுவரும் வடிகாலாகவும் இது அமைவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...