திமுகவினரே அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலை அளிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேட்டி

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவுக்கு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 28ஆம் தேதி வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடத்துவது குறித்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றதாகவும், அதனை இருட்டடிப்பு செய்யும் வகையில் தமிழகத்தில் திமுக அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது எனவும் பேட்டி அளித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் முதல் எண் மக்கள் யாத்திரையை தொடங்கியுள்ளதாகவும் திருப்பூரில் 28ஆம் தேதி நடைபெறும் யாத்திரயில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார் எனவும் தெரிவித்தார்.

யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவு 10 லட்சம் பேர் கூடக்கூடிய வகையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக பிரதமரை வரவழைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுகவினர் பொய்யின் பிறப்பிடமாக இருப்பதாகவும், இதற்காகத்தான் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நல்லதொரு தீர்ப்பை நேற்று வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் என் மண் என் மக்கள் யாத்திரையில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பொதுமக்கள் மட்டுமல்லாது, திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட தங்கள் கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு வழங்கி வருவதாகவும், திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளிக்கொண்டுவரும் வடிகாலாகவும் இது அமைவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...