கோவையில் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை மனித நேய வார விழா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அனைத்து அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும் என்றும் பொள்ளாச்சியில், 25ம் தேதி ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி நடைபெறும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மனித நேய வார விழாவையொட்டி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நலத் துறையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து அனைத்து அரசுத் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஜனவரி 24-ஆம் தேதி கண்காட்சி நடத்தப்படும்.

ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி கோவை, பொள்ளாச்சியில் ஜனவரி 25-ஆம் தேதி நடத்தப்படும். ஜனவரி 26-ஆம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் மூலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியல் இன மாணவ, மாணவிகள் வசிக்கும் பகுதியில் கலந்துரையாடி, அவா்களது இல்லத்தில் தேநீா் விருந்துடன் மனமகிழ் நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஜனவரி 27-ஆம் தேதி காவல் துறை சார்பில் மதத் தலைவா்கள், பட்டியலின சான்றோர் ஒன்று கூடும் மத நல்லிணக்க கூட்டம் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், காவல் துறையினா் கலந்துகொள்ளும் வகையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்குகள் நடைபெறும். கல்வித் துறையின் மூலம் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஜனவரி 28 -ஆம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கோவை மாவட்ட தொழில் மைய அலுவலக வளாகத்தில் சமுதாயத்தில் முன்னேற்ற நிலையில் உள்ள ஆதிதிராவிட அலுவலா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைக் கொண்டு, சமுதாய பொருளாதார முன்னேற்ற சிந்தனைக் கூட்டங்கள் ஜனவரி 29-ஆம் தேதி நடத்தப்படும்.

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் மனிதநேய வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்குதல், கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தொழில் முனைவோருக்கான நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜனவரி 30-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...