காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர்த் திருவிழாவுடன் துவங்கியது. இதன் பின்னர், இன்று மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. இன்று மதியம் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.



பின்னர் சாமி சப்பாரத்தில் மலையை வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசந்தி பூஜையும், திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளையும் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மலை அடிவாரத்தில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...