ஈச்சனாரியில் ரத்தினம் குழுமம் அமைத்துள்ள அடல் இன்குபேஷன் சென்டரில் புதிய ஆய்வகம் திறப்பு விழா!

ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டரில் புனையமைப்பு ஆய்வகம் திறப்புக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு முரளிதரன் பங்கேற்றார்.


கோவை: ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனையமைப்பு ஆய்வகத்தை (ஃபேப் லேப்) இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆய்வு திறனை ஊக்குவித்து, ஐ ஓ டி சாதனங்கள், முப்பரிமாண அச்சுப்பொறிகள் போன்ற முன்னோடி தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

இந்த நிகழ்வில், பிறவியிலேயே காது கேளாதோர்களுக்கான கருவிகளை தயாரிக்கும் ஸ்டார்ட்அப் பேக்யார்ட் கிரியேடர்ஸ் நிறுவனர்கள் ராமன், லட்சுமணன், சூரிய மின் உற்பத்தித் தளங்களில் உபகரணங்களை தூய்மைப்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் சொலேவியோ இணை நிறுவனர் பிரசாந்த், மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் கருவிகளை உருவாக்கும் வட்டளோ மின்சுற்றுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனர் அமிர்தேஷ் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்து செயல்படும் செர்க்கிள் எக்ஸ்-ன் நிறுவனர்கள் விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி அவர்களிடம் செர்க்கிள் எக்ஸ் பற்றிய கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் நாகராஜ் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, இந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை தருவதோடு, தொழில்நுட்ப நவீனத்துவத்தின் முன்னோடிகள் என்ற நிலையையும் உயர்த்தும்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...