குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கீரணத்தம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்கவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட குடிநீர் விநியோக பணியாளர் முறையாக பணி செய்யவில்லை. மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை, கீரணத்தம் வடக்குப் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் நேற்று ஜன.18 மனு அளித்தனர்.

இதுகுறித்து கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் இளங்கோவன் தலைமையில் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"கீரணத்தம் வடக்கு திட்டப் பகுதியில் சுமார் 640 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு கடந்த ஓராண்டாக குடிநீர் விநியோகம் செய்துகொண்டிருந்த பணியாளரை நீக்கிவிட்டு வேறு வேறு ஒரு பணியாளரை குடிசை மாற்று வாரியத்தினர் நியமித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நபர் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இப்பகுதியில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதுடன், கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்."

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...