தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர், திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107.வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாசிலை அருகில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி முன்னிலையில் வடக்கு தெரு காமராஜபுரத்திலிருந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் உற்சாகமாக பேரணியாக சின்னக் கடைவீதி கடைவீதி பூக்கடை மொக்கை சந்திப்பு வழியாக பழைய நகராட்சி வளாகம் முன்பு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்கு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க்கு மகேஷ் தலைமையில் தேவேந்திர தெருவில் எம்.ஜி.ஆரின் 10 ஆடி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...