காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் எம்ஜிஆரின் திருவுருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவரும் எம்ஜிஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழா நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. காங்கேயம் நகர கழகம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நகர கழக நிர்வாகிகளுடன் இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.பி.துரைசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் எஸ்.செல்வகுமார், நகர கழக அவைத்தலைவர் கே.கே.பழனிச்சாமி, நகர துணை செயலாளர் ஏ.ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...